பதிவு செய்த நாள்
23 அக்2019
07:09
மும்பை: இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, நடப்பு ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, கிரெடிட் சுயிஸ் வங்கி, இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.ஒரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.8 சதவீதமாக குறைந்திருக்க, இன்னொரு பக்கம் குடும்பங்களின் சொத்து மதிப்பு, இரு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நான்கு மடங்கு:
இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு ஆண்டில், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 12.6 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 894 லட்சம் கோடி ரூபாய்.இதுவே, கடந்த ஆண்டில், இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, 5.97 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 424 லட்சம் கோடி ரூபாய்.
இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 2000 – -2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும், 43 சதவீதம் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம். அதாவது, 312 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு அதிகரிக்கும். நடப்பு ஆண்டில், சராசரியாக, தனிநபர் ஒருவரின் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் ரூபாய். இது, 3.3 சதவீதம் அதிகரிப்பு. அதே சமயம், கடன், 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி சொத்துக்கள், 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி அல்லாத சொத்துக்கள், 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சந்தை நிலையற்று இருப்பதை உணர்த்துகிறது.
ஐந்தாவது இடம்:
கிட்டத்தட்ட, 4,500 பேர், 355 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 1,790 பேர், 710 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத்துள்ளனர்.உலகளவில், மிக அதிக சொத்து வைத்திருக்கும் தனிநபர் கொண்ட நாடுகள் வரிசையில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து என்பது நிதிச் சந்தைகளில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளையும் உள்ளடக்கியே வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், ரியல் எஸ்டேட் மந்த நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வறிக்கை வெளியிட்டிருப்பினும், சொத்து மதிப்பு இரட்டிப்பானதற்கான காரணம் எதையும் வங்கி குறிப்பிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|