பிரதமர் மோடிக்கு வால்மார்ட் கடிதம் பிரதமர் மோடிக்கு வால்மார்ட் கடிதம் ... பிஎஸ்என்எல்., வாடிக்கையாளருக்கு யப் டிவி சேவை பிஎஸ்என்எல்., வாடிக்கையாளருக்கு யப் டிவி சேவை ...
சொத்து சேர்ப்பதில் இந்தியர்கள் சாதனை; இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
07:09

மும்பை: இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, நடப்பு ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, கிரெடிட் சுயிஸ் வங்கி, இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.ஒரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.8 சதவீதமாக குறைந்திருக்க, இன்னொரு பக்கம் குடும்பங்களின் சொத்து மதிப்பு, இரு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நான்கு மடங்கு:
இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு ஆண்டில், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 12.6 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 894 லட்சம் கோடி ரூபாய்.இதுவே, கடந்த ஆண்டில், இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, 5.97 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 424 லட்சம் கோடி ரூபாய்.

இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 2000 – -2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும், 43 சதவீதம் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம். அதாவது, 312 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு அதிகரிக்கும். நடப்பு ஆண்டில், சராசரியாக, தனிநபர் ஒருவரின் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் ரூபாய். இது, 3.3 சதவீதம் அதிகரிப்பு. அதே சமயம், கடன், 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி சொத்துக்கள், 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி அல்லாத சொத்துக்கள், 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சந்தை நிலையற்று இருப்பதை உணர்த்துகிறது.

ஐந்தாவது இடம்:
கிட்டத்தட்ட, 4,500 பேர், 355 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 1,790 பேர், 710 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத்துள்ளனர்.உலகளவில், மிக அதிக சொத்து வைத்திருக்கும் தனிநபர் கொண்ட நாடுகள் வரிசையில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து என்பது நிதிச் சந்தைகளில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளையும் உள்ளடக்கியே வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், ரியல் எஸ்டேட் மந்த நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வறிக்கை வெளியிட்டிருப்பினும், சொத்து மதிப்பு இரட்டிப்பானதற்கான காரணம் எதையும் வங்கி குறிப்பிடவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)