பதிவு செய்த நாள்
24 அக்2019
03:50
புதுடில்லி: பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக செய்யப்படும் முதலீடுகள், தொடர்ந்து, நான்காவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில், பி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் வழியாக செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து நான்காவது மாதமாக வீழ்ச்சியடைந்து, செப்டம்பர் இறுதியில், 76 ஆயிரத்து, 611 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்பு பத்திரங்கள் வழியாக செய்யப்பட்ட முதலீடு, ஆகஸ்ட் மாத இறுதியில், 79 ஆயிரத்து, 88 கோடி ரூபாயாக இருந்தது.இதுவே, ஜூலை மாத இறுதியில், 81 ஆயிரத்து, 82 கோடி ரூபாயாகவும், ஜூன் மாத இறுதியில், 81 ஆயிரத்து, 913 கோடி ரூபாயாகவும், மே மாதத்தில், 82 ஆயிரத்து 619 கோடி ரூபாயாகவும் இருந்தது.செப்டம்பர் மாதத்தை பொருத்தவரை, பங்குகளில் மட்டும், 50 ஆயிரத்து 676 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
பங்கேற்பு பத்திரங்களின் பயன்பாடு, 2017ம் ஆண்டிலிருந்தே குறைந்து வருகிறது. இங்கிருக்கும் கள்ளப் பணத்தை, பங்கேற்பு பத்திரங்கள் வழியாக கொண்டு வந்து முதலீடு செய்வதை தடுப்பதற்காக, 2017லிருந்து விதிமுறைகளை கடுமையாக்கியது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி.இதனையடுத்து, பங்கேற்பு பத்திரங்கள் வழியாக செய்யப்படும் முதலீடுகள் சரிந்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|