பதிவு செய்த நாள்
24 அக்2019
03:57
திருப்பூர்: ‘அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சில், ஆயத்த ஆடை துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என, திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு, முக்கிய வர்த்தக மையமாக அமெரிக்கா உள்ளது. திருப்பூரின் ஏற்றுமதியில், 35 சதவீதம், அமெரிக்காவை சார்ந்து நடக்கிறது. இருப்பினும், நம் நாட்டு ஆடைகளுக்கு அதிகளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அமெரிக்க சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியவில்லை.
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தில், மற்ற துறைகள் போன்று, ஆடைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.அமெரிக்க சந்தையில், இந்திய ஆடைகளுக்கு விதிக்கப்படும் வரி விலகினால், வர்த்தக வாய்ப்புகள் பெருகும். இந்திய ஆடை ஏற்றுமதியும் சிறப்பான வளர்ச்சி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|