தொழில் புரிவது குறித்த உலக வங்கி ஆய்வு தொழில் புரிவது குறித்த உலக வங்கி ஆய்வு ...  வளர்ச்சியை 5.5 சதவீதமாக குறைத்தது, ‘பிட்ச்’ வளர்ச்சியை 5.5 சதவீதமாக குறைத்தது, ‘பிட்ச்’ ...
உலக வங்கி பட்டியலில் முன்னேறும் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2019
04:34

புதுடில்லி: எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


திவால் சட்டம்:

பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' பிரசாரம், அன்னிய முதலீட்டை ஈர்ப்பது, தனியார் துறையை மேம்படுத்துதல் நாட்டின் ஒட்டுமொத்த போட்டித் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில், இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருவது இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக, திவால் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது, இந்த முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.


'எளிதாக தொழில் புரிதல்' குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கை, 190 நாடுகள் குறித்து ஆய்வு செய்து, வெளியிடப்படுகிறது. உலக வங்கியின் இந்த தரவரிசை பட்டியலில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளது. இதையடுத்து சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.கொரியா, ஐந்தாவது இடத்திலும், அமெரிக்கா ஆறாவது இடத்திலும் உள்ளது. ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் பல்வேறு தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை குறைத்துள்ள சூழ்நிலையிலும், இந்த தரவரிசை பட்டியலில், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.


மற்றொரு சாதனை:

புதிய திவால் சட்டம் மட்டுமின்றி, வேறு சில பிரிவுகளில் கண்டுள்ள முன்னேற்றமும், இந்தியா தரவரிசை பட்டியலில் முன்னுக்கு வர உதவி செய்துள்ளது.குறிப்பாக வணிகங்களை பதிவு செய்வது, கட்டுமான அனுமதி, எல்லைகளை கடந்து வர்த்தகம் ஆகிய பிரிவுகளில், நல்ல முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளதாக, உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.மோடி பிரதமராக பதவி ஏற்கும்போது, இந்தியா, 190 நாடுகளில், 142 இடத்தில் இருந்தது. நான்கு ஆண்டுகளில் அதாவது, 2018ல், 100 வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது, 63வது இடத்தை எட்டியுள்ளது. ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்திய பின்னர், வணிகத்தை எளிதாக்குவதில் சிறப்பான முன்னேற்றம் கண்ட, உலகளவிலான, 10 நாடுகளில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இப்படி இடம்பெறுவது, இது, மூன்றாவது முறையாகும். அந்த வகையில் இதிலும், இந்தியா மற்றொரு சாதனை புரிந்துள்ளது.


தீர்மானிக்கும் 10 பிரிவுகள்:

ஒரு தொழிலைத் தொடங்குவது, கட்டுமான அனுமதிகளைக் கையாளுதல், மின்சாரம் பெறுதல், சொத்துக்களை பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறுபான்மை முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், வரி செலுத்துதல், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் திவால் நடவடிக்கை ஆகிய, 10 பிரிவுகள், தரவரிசை பட்டியலில் ஒரு நாட்டின் இடத்தை தீர்மானிக்கின்றன.


இது மிகப்பெரிய சாதனையாகும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 25வது இடத்தை பிடிப்பதே நமது இலக்காகும். பிரதமர் மோடி எங்களுக்கு நிர்ணயத்திருக்கும் இலக்கு இது.


-அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, நிடி ஆயோக்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)