பதிவு செய்த நாள்
25 அக்2019
04:36
புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.6 சதவீதமாக இருக்கும் என, கணித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்து, 5.5 சதவீதமாக அறிவித்துள்ளது.மேலும், நாட்டின் வளர்ச்சி அடுத்த நிதியாண்டில், 6.2 சதவீதமாகவும், அதற்கு அடுத்த நிதியாண்டில், 6.7 சதவீதமாகவும் உயரும் என தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி, இம்மாத துவக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், அதை விட குறைவாக, 5.5 சதவீதமாக பிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.உள்நாட்டு செலவினம் குறைந்தது, தேவைகள் குறைந்தது மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் கிடைப்பது குறைந்தது ஆகிய காரணங்கள், வளர்ச்சியின் வேகத்தை குறைத்துவிட்டதாக, பிட்ச் தெரிவித்துஉள்ளது.
உலக வர்த்தகத்தில் சரிவு உட்பட இந்திய பொருளாதார மந்த நிலைக்கு பல காரணிகள் இருப்பினும், கடன் வழங்குவது குறைந்துள்ளது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் ரியல் எஸ்டேட், வாகன துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவை வளர்ச்சியை பாதிக்கிறது என, பிட்ச் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|