பதிவு செய்த நாள்
25 அக்2019
04:38
மின்சார காரை வணிக ரீதியாக, அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த இயலாது என, மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, உள்கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு ஆகியவற்றில் இருக்கும் குறைபாடே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டிவிகிதம் மேலும், குறைக்கப்படலாம் என, டி.பி.எஸ்., வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு, டில்லியில் விற்பனையாகும் தெய்வ சிலைகளில், சீன தயாரிப்புகளின் பங்கு, 80 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக குறைந்துவிட்டதாக, டில்லி வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தனியார் பங்கு முதலீடு, இதுவரை இல்லாத அளவுக்கு செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அதிகரித்து, 66 ஆயிரத்து, 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த, 8 ஆண்டுகளில் இல்லாத வகையில், இரண்டாவது காலாண்டில், 39 சதவீதம் சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|