பதிவு செய்த நாள்
26 அக்2019
04:21
கோல்கட்டா: தீபாவளியை தொடர்ந்து ஆபரணங்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தங்க ஆபரண தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது, 20 முதல் 40 சதவீதம் வரை விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கும் நிலையிலும், தீபாவளியை ஒட்டி தேவைகள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இது குறித்து வர்த்தகர்கள் கூறியதாவது:கடந்த மூன்று நான்கு மாதங்களில் தங்கத்தின் விலை சுமார், 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது, இறக்குமதி வரி அதிகரிப்பு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக, தீபாவளிக்கு முன்னதாக வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.இருப்பினும், தீபாவளிக்கு மிக நெருக்கத்தில் தேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. நேற்று நடைபெற்ற தந்தேராஸ் பண்டிகையின் போது விற்பனை எவ்வளவு அதிகரித்தது என்பது இனிதான் தெரியவரும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விற்பனையையும் சேர்த்து பார்த்தால் விற்பனை நிலவரம் தெரியவரும். இருப்பினும் விற்பனை அதிகரித்திருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இவை ஒருபுறமிருக்க, தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் தங்கத்துக்கு பதிலாக வெள்ளி பக்கம் திரும்பவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.குறிப்பாக வெள்ளி நாணயங்கள், வீட்டு உபயோகத்துக்கான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மாற்றாக கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|