மந்த நிலையை தோற்கடித்த ‘ஸ்மார்ட்போன்’ விற்பனை மந்த நிலையை தோற்கடித்த ‘ஸ்மார்ட்போன்’ விற்பனை ...  இந்திய பொருளாதாரம் ஏறுமுகம் இ.சி.ஜி.சி., தலைவர் பெருமிதம் இந்திய பொருளாதாரம் ஏறுமுகம் இ.சி.ஜி.சி., தலைவர் பெருமிதம் ...
தங்கத்தின் தேவை அதிகரிக்கும் விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2019
04:21

கோல்கட்டா: தீபாவளியை தொடர்ந்து ஆபரணங்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தங்க ஆபரண தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உள்ளனர்.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது, 20 முதல் 40 சதவீதம் வரை விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கும் நிலையிலும், தீபாவளியை ஒட்டி தேவைகள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இது குறித்து வர்த்தகர்கள் கூறியதாவது:கடந்த மூன்று நான்கு மாதங்களில் தங்கத்தின் விலை சுமார், 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது, இறக்குமதி வரி அதிகரிப்பு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக, தீபாவளிக்கு முன்னதாக வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.இருப்பினும், தீபாவளிக்கு மிக நெருக்கத்தில் தேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. நேற்று நடைபெற்ற தந்தேராஸ் பண்டிகையின் போது விற்பனை எவ்வளவு அதிகரித்தது என்பது இனிதான் தெரியவரும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விற்பனையையும் சேர்த்து பார்த்தால் விற்பனை நிலவரம் தெரியவரும். இருப்பினும் விற்பனை அதிகரித்திருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இவை ஒருபுறமிருக்க, தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் தங்கத்துக்கு பதிலாக வெள்ளி பக்கம் திரும்பவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.குறிப்பாக வெள்ளி நாணயங்கள், வீட்டு உபயோகத்துக்கான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மாற்றாக கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)