பதிவு செய்த நாள்
26 அக்2019
04:23
அவிநாசி: ‘‘இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் உள்ளது,’’ என, ‘இ.சி.ஜி.சி.,’ எனும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தான், பொருளாதார மந்தநிலை, அதிகளவில் உள்ளது. இதற்கு, அரசியல் மாற்றம், அரசின் கொள்கை முடிவு, சட்ட திட்டம் போன்றவை முக்கிய காரணங்கள். நமது நாட்டில், அத்தகைய நிலையில்லை.இ.சி.ஜி.சி.,யில் சேவை பெறும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனத்தினர், உரிய ஆவணங்களை, சரியான முறையில் சமர்ப்பிக்கும் போது, நிறுவனத்தின் சேவையை தடையின்றி பெற முடியும்.உலகளவில் பொருளாதார வீழ்ச்சி, மந்தநிலை தென்படுகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரம், வளர்ந்து வருகிறது. ஏற்றுமதியிலும், நமது நாட்டின் பங்கு உயர்ந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|