அதிகரிக்கும் தனியார் பங்கு முதலீடுகள் அதிகரிக்கும் தனியார் பங்கு முதலீடுகள் ...  புதிய பங்கு வௌியீடு ரிலையன்ஸ் வாபஸ் புதிய பங்கு வௌியீடு ரிலையன்ஸ் வாபஸ் ...
வாகன உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2019
03:38

புதுடில்லி: –கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் காணப்பட்ட வாகன தயாரிப்பு தொழில், தீபாவளியை முன்னிட்டு, சிறப்பாக வர்த்தகம் செய்து, அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதனால், அந்த துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, தீபாவளியை முன்னிட்டு அதிகரித்துள்ளது.எண்ணிக்கை அதிகம்இது குறித்து, இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் தலைவரான, ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே, ‘‘எதிர்பார்த்ததை விட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிறுவனங்களில் இருந்து விற்பனைக்காக, டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் மற்றும் டீலர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு விற்கப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது,’’ என்றார்.எனினும், துல்லியமான புள்ளிவிபரத்தை கேட்கும் போது, சில தயாரிப்பு நிறுவனங்கள், ‘இப்போது தான் கணக்கெடுத்து வருகிறோம். இன்னும் ஒரு சில நாட்கள் பொறுத்திருங்கள்; முழுமையான புள்ளிவிபரங்களை தருகிறோம்’ என்கின்றன.

ஆனாலும் அவர்களின் குரலில் ஏமாற்றமோ, சோர்வோ இல்லாமல், மகிழ்ச்சியே தென்பட்டது.பயணியர் போக்குவரத்து வாகன உற்பத்தியில், கடந்த சில வாரங்களாக தொய்வு நிலை காணப்பட்ட, மாருதி கார் நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு, சிறப்பான விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இழுபறிஅந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த, எஸ் – பிரஸ்சோ மினி எஸ்.யு.வி., கார், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.செப்டம்பர் 30ல் அறிமுகம் செய்யப்பட்ட அந்த காருக்கு, இதுவரை, 16 ஆயிரத்து, 500 மேற்பட்ட புக்கிங் கிடைத்துள்ளது;6,000கார்களை டெலிவரி கொடுத்துள்ளது.ஹூண்டாய் கார் நிறுவனமும், தீபாவளியை முன்னிட்டு, விற்பனை சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின், எஸ்.யு.வி., வெனியு, வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய, ‘தன்ந்திரேஸ்’ நாளில், மகிந்திரா கார் நிறுவனம், 13 ஆயிரத்து, 500 வாகனங்களை விற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, பண்டிகை கால துவக்கத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பான சில பிரச்னைகளால் இழுபறியாக இருந்த நிலை, அடுத்த சில நாட்களில் மாறி, விற்பனை சிறப்பாக இருந்ததாக தெரிவிக்கிறது. சொகுசு கார் தயாரிப்பாளர்களான, மெர்சிடஸ் பென்ஸ், டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மட்டும், ௨௫௦ கார்களை விற்றுள்ளது. விற்பனையில் சாதனைதீபாவளியை முன்னிட்டு, இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் சக்கைபோடு போட்டுள்ளது.

முன்னணி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ முந்தைய ஆண்டை விட, இந்த தீபாவளி பண்டிகை நாட்களில், இரண்டு இலக்க அளவில் விற்பனையில் கூடுதல் சாதனை படைத்துள்ளது.அதுபோலவே, சுசுகி மோட்டார், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் வாகன விற்பனையும் சிறப்பாக இருந்ததாக, அந்த நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)