பதிவு செய்த நாள்
31 அக்2019
03:42
புதுடில்லி: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகள், நேற்று, ௧௭ சதவீதம் அதிக விற்பனை கண்டன.முன்னுரிமை அடிப்படையில் அரசுக்கு பங்குகளை ஒதுக்கலாம்; 3,353 கோடி ரூபாய் திரட்டலாம் என, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதன் பங்குகள் விற்பனையில் முன்னேற்றம் காணப்பட்டது.
பி.எஸ்.சி.,யில் நேற்று, அந்த நிறுவன பங்குகள், 15.32 சதவீதம் உயர்ந்து, பங்கு, 20.70 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய நாளில், அதிகபட்சமாக, 19.77சதவீதம் உயர்ந்து21,50ரூபாய்க்கு பங்கு விற்பனையானது.தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ.,யில், ௧௬.௯௪ சதவீதம் உயர்வு கண்டு, 21.05 ரூபாயாக இருந்தது. கடந்த செவ்வாய் அன்று கூடிய அந்த வங்கியின் இயக்குனர்கள் குழு, 15 கோடி பங்குகளை அரசுக்கு ஒதுக்க அனுமதி அளித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|