பதிவு செய்த நாள்
31 அக்2019
03:49
பெங்களூர், அக். ௩௧–அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையகமாக வைத்து செயல்படும், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்தியாவில் உள்ள தன் கிளை தொழில்களில், 4,500 கோடி ரூபாயை சமீபத்தில் கூடுதலாக முதலீடு செய்துள்ளது.
கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, அமேசான் நிறுவனம், ரிடெய்ல், உணவு மற்றும் பணப்பட்டுவாடா போன்ற கிளை தொழில்களில்4,500 கோடி ரூபாயை கூடுதலாக முதலீடு செய்துள்ளது. எனினும், எந்தெந்த துறைக்கு, எவ்வளவு நிதி என்பது குறித்து விளக்கப்படவில்லை.
அமெரிக்காவின், ‘வால்மார்ட்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘பிளிப்கார்ட்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கும், அமேசான் நிறுவனத்திற்கும், இந்தியாவில் கடும் போட்டி நிலவுகிறது.இரு நிறுவனங்களும், உணவு, ரீடெய்ல், பணப்பட்டுவாடா தொழில்களில் ஈடுபட்டுள்ளன. அமேசான் கூடுதலாக, பிரைம் வீடியோ மற்றும் மியூசிக் சேவையையும் வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|