பதிவு செய்த நாள்
01 நவ2019
03:37
புதுடில்லி: நாட்டின் கடல் பொருட்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, சீனாவுக்கான ஏற்றுமதி, ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சீனாவுக்கான கடல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மூன்று மடங்கு அதிகரித்து, 5,680 கோடி ரூபாய் என்ற நிலையை, முதன் முறையாக எட்டிஉள்ளது.நடப்பு ஆண்டின் இறுதியில், நாட்டின் கடல் பொருட்கள் ஏற்றுமதி, 7,100 கோடி ரூபாயை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 9ம் தேதி, இந்தியா வந்த சீன வர்த்தக துாது குழு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3,550 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கடல் பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியா உலகளவில் நான்காவது பெரிய நாடாக உள்ளது. நாட்டின் மொத்த கடல் பொருட்கள் ஏற்று மதியின் மதிப்பு, 49 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் ஆகும்.மீன் வளர்ப்பு உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது இடத்தையும், மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் அதிகளவில் கடல் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக, சீனா உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|