பதிவு செய்த நாள்
01 நவ2019
23:20
சென்னை:முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிக்கான, உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டத்தில், 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், 16 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.
தமிழக அரசு, முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முதலீட்டு வழிகாட்டுதலுக்கும், அரசு அனுமதிகளை துரிதப்படுத்தவும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம், முதல்வர் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில், அரசு அனுமதிக்காக விண்ணப்பித்து, பல்வேறு நிலைகளில் இருந்த, 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டங்கள் வழியே, 8,120 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். புதிதாக, 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி என, தமிழகத்தில் பல பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|