பதிவு செய்த நாள்
01 நவ2019
23:21
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் சரிவை கண்டுள்ளது.அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.டி., வசூலை பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அரசின் இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், மூன்று மாதங்களாக, இலக்கை விட குறைவாகவே வசூலாகி உள்ளது. அக்டோபர் மாதம் பண்டிகை காலமாக இருந்தபோதும், வசூல் குறைந்துள்ளது கவலைஅளிப்பதாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், வரி வசூல், 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த, ஜி.எஸ்.டி., வருவாய், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய்.இதில், மத்திய, ஜி.எஸ்.டி., வசூல், 17 ஆயிரத்து, 582 கோடி ரூபாய். மாநில, ஜி.எஸ்.டி., வசூல், 23 ஆயிரத்து, 674 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வசூல், 46 ஆயிரத்து, 517 கோடி ரூபாய்.
இதில், இறக்குமதி மூலமாக பெறப்பட்ட, 21 ஆயிரத்து, 446 கோடி ரூபாயும் அடக்கம். மேலும், கூடுதல் வரி மூலம், 7,607 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில், இறக்குமதி மூலமான வருவாய், 774 கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|