பதிவு செய்த நாள்
01 நவ2019
23:26
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்து உள்ளது.
தொழிற்சாலைகளுக்கான, ‘ஆர்டர்’ மற்றும் உற்பத்தி ஆகியவை குறைந்ததை அடுத்து, அக்டோபரில் தயாரிப்பு துறை வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், அக்டோபர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில், தயாரிப்புதுறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம். ஐ., குறியீடு, 50.6 புள்ளிகளாக, இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இது செப்டம்பரில், 51.4 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
அந்த வகையில், அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, உற்பத்தி துறையின் வளர்ச்சியில் ஓரளவு மட்டுமே முன்னேற்றம் இருப்பதை ஆய்வு குறிக்கிறது.அக்டோபர் மாதத்தில் தொழிற்சாலைகளுக்கான ஆர்டர்கள், உற்பத்தி இரண்டுமே பலவீனமாக உள்ளன. மேலும், வேலைகள் உருவாக்கம் ஆறு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
தேவைகள் குறைந்தது, உற்பத்தி துறையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வணிக நம்பிக்கை ஆகியவற்றை அது குறைத்துவிட்டது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கொள்முதல் அளவு குறைந்திருக்கும் நிலையில், அக்டோபர் மாதத்தில் உள்ளீட்டு செலவுகள், நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
பாலியானா டி லிமா,
தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு
கடந்த செப்டம்பரில், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, 5.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை குறிப்பதாக உள்ளது. முக்கியமான எட்டு துறைகளில், ஏழு துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளன.
நிலக்கரி உற்பத்தி, 20.5 சதவீதமும்;கச்சா எண்ணெய், 5.4 சதவீதமும்; இயற்கை எரிவாயு, 4.9 சதவீதமும் சரிந்துள்ளன.சுத்திகரிப்பு பொருட்கள், சிமென்ட், உருக்கு, மின்சாரம் ஆகியவற்றின்உற்பத்தியும் சரிவை சந்தித்து உள்ளன. மொத்தம் உள்ள எட்டு துறைகளில், ஒரே ஒரு துறை மட்டும்வளர்ச்சியை கண்டுள்ளது. உரத் துறை மட்டும், 5.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 1.3 சதவீதம்அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|