பதிவு செய்த நாள்
02 நவ2019
23:40
மும்பை:அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்டீவன் முனுச்சின், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸை, நேற்று மும்பையில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலை குறித்தும், ஒழுங்குமுறை முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக, பிற நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்கான சுற்றுப்பயணத்தில், அமெரிக்க நிதியமைச்சர் முனுச்சின் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் கென்னத் ஜஸ்டர் மற்றும் மும்பையில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் ஜெனரல் டேவிட் ஜே ரான்ஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.ஈரான் நாட்டிலிருந்து, இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, அமெரிக்கா தடை விதித்திருந்த நிலையில், ஈரானுக்கு பணம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதும், அதற்கான தீர்வுகளை எட்டுவதில், ரிசர்வ் வங்கி முக்கிய பங்காற்றியதும் இச்சமயத்தில் குறிப்பிடுவது பொருத்த மானதாக இருக்கும்.ரிசர்வ் வங்கி அதிகாரிகளை தொடர்ந்து, அமெரிக்க நிதியமைச்சர் முனுச்சின், இந்தியாவின் தொழில் துறை பிரமுகர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|