பதிவு செய்த நாள்
02 நவ2019
23:44
புதுடில்லி:இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, நான்காவது காலாண்டில் அதிகரிக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில், இந்தியா மற்றும் சீனா, விரைவான பொருளாதார வளர்ச்சியை காணும் என, இ.ஐ.யு., எனும், ‘தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யுனிட்’ ஆய்வறிக்கை கூறியுள்ளது.இது குறித்து, அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ள தாவது:
உலகெங்கிலும் உள்ள பெரிய பொருளாதார நாடுகள் அனைத்திலும், மூன்றாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பலவீனமாகவே இருக்கும்.‘ஜி – -7’ மற்றும் பிரிக்ஸ் பொருளாதாரங்களில், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே, இரண்டாவது காலாண்டை விட மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி தென்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மூன்றாவது காலாண்டு அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணக்கூடும். மேலும், நான்காவது காலாண்டில், 2.20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.இதேபோல், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், நான்காவது காலாண்டில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|