பதிவு செய்த நாள்
03 நவ2019
23:51
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை,
கடந்த வாரம், திங்கள் முதல் வியாழன் வரை சரிந்து வர்த்தகமான சூழலில்,
வார வர்த்தக இறுதி நாளான வெள்ளியன்று உயர்ந்தது. ஒரு பேரலுக்கு, 2 அமெரிக்க டாலர் வரை விலை உயர்ந்து, 1 பேரல் விலை, 56.17 டாலராக வியாபாரம் முடிவுற்றது.
அமெரிக்கா
மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வரும்
வகையில், இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு குறித்த விபரங்கள்,
சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து, வரும் நாட்களில், சுமுக
உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், வார இறுதி நாளான வெள்ளியன்று, இரு நாடுகளின் பொருளாதார காரணிகள் குறித்த தகவல்களும் வெளியாகின. இதில்,
தொழிற்சாலை வளர்ச்சி குறியீடு, இரு நாடுகளிலும் எதிர்பார்த்த
அளவைக் காட்டிலும் உயர்ந்து இருந்தது. இது, சந்தையில் கச்சா எண்ணெய்
விலை உயர, ஒரு வலுவான காரணமாக அமைந்தது.
பொதுவாகவே தொழில் துறை
வளர்ச்சியும், கச்சா எண்ணெய் விலையும், ஒரே நிலையான போக்கை உடையது.
வளர்ச்சி குறையும்போது எண்ணெய் விலை குறைவதும், வளர்ச்சி
அதிகரிக்கும் போது எண்ணெயின் தேவை அதிகரிக்கும். இதன் அடிப்படையில் பொருள் வாணிப சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும்.
அமெரிக்காவும்,
சீனாவும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை தொடர்ந்து அதிகரித்து
வருகின்றன. கடந்த, 16 மாதங்களாக, இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று
வருகிறது.
தற்போது, ஏதாவது ஒரு வகையில் நிலைமை சீரடையும் என்ற கண்ணோட்டம், விலைக்கு சாதகமாக அமைந்தது.
வாரம்
ஒரு முறை வெளிவரும், அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு விபரம், கடந்த
புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இதில், எதிர்பார்த்த அளவைக் காட்டிலும், இருப்பு விகிதம் அதிகரித்திருந்தது. இதனால், எண்ணெய் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது.
அமெரிக்காவின்
தினசரி எண்ணெய் உற்பத்தி, ஆகஸ்ட் மாதத்தில், 6 லட்சம் பேரல்
உயர்ந்து, மொத்த உற்பத்தி, 1.24 கோடி பேரலாக வரலாற்று உச்சத்தை
அடைந்துள்ளது.தற்போது, உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில்,
அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக, சவுதி
அரேபியாவும், மூன்றாவதாக, ரஷ்யாவும் உள்ளன. இந்த மூன்று நாடுகளும்
இணைந்து, உலகத்தின் மொத்த தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை, கடந்த இரு வாரங்களாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த மே மாதம் முதல், ஆகஸ்ட் மாதம் வரை உயர்ந்து வர்த்தகமான தங்கம், செப்டம்பர் மாதத்தில் விலை சரிந்தது.அப்போது, அவுன்ஸ் தங்கத்தின் விலை, 100
அமெரிக்க
டாலர் வரை சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்,
அமெரிக்க – சீன நாடுகளுக்கிடையே நடந்து வரும் வர்த்தக மோதலால்
ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த சூழ்நிலை, வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் போன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்தது.மேலும்,
அமெரிக்க அரசு கருவூலங்களில் ஆதாயம் தொடர்ந்து சுருங்கி
வந்ததாலும், தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் மாதத்தில் உயர்ந்து
வர்த்தகமாகியது. இம்மாதத்தில் மட்டும், 1 அவுன்ஸ் தங்கம், 90
அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது.
அமெரிக்காவின், விவசாயம் சாரா
அனைத்து அரசு துறைகளிலும், புதிதாக பணியில்
அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரம், ஒவ்வொரு மாதத்தின் முதல்
வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும். மேலும், வேலையில்லாதோர்
பட்டியல் போன்றவையும் அன்று வெளியிடப்படும்.இதன்படி, கடந்த
வெள்ளியன்று வெளிவந்த புள்ளிவிபரத்தில்,
எதிர்பார்த்ததை விட
பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
இருப்பினும், இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அக்டோபர்
மாதத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தது.மேலும், அன்றைய தினம் வெளிவந்த,
தொழிற்சாலை வளர்ச்சி குறியீட்டு எண், எதிர்பார்த்ததை விட குறைந்து வந்தது. இவ்விரு காரணிகளால், அமெரிக்காவின் வளர்ச்சி குறையும் என்ற கணிப்பில், அமெரிக்க நாணய குறியீடு சரிய ஆரம்பித்தது. இது, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை உயர,
வலுவான காரணமாக அமைந்தது.
கடந்த
வாரத்தில் புதன் கிழமை அன்று நடைபெற்ற அமெரிக்க ரிசர்வ் வங்கியின்,
வட்டி
விகிதக் கொள்கை கூட்டத்தில், எதிர்பார்த்தபடி வட்டி விகிதம்,
0.25சதவீதம் குறைக்கப்பட்டது.
மேலும், இந்த ஆண்டில் இதுவே கடைசி குறைப்பாகவும் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம், மீண்டும் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.
வட்டி
விகிதம் குறைக்கப்படும்போது, கருவூலங்களில் ஆதாயம் குறையும்.
இதையடுத்து, முதலீட்டாளர் களின் பார்வை, தங்கத்தின் மீது
திரும்பும். எனவே, அடுத்து வரும் நாட்களில், தங்கத்தின் விலை உயரும்
என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை,
1,525 டாலர் என்பது, தங்கம் விலையில் நல்ல ரெசிஸ்டென்ஸ். இதை கடக்கும்
பட்சத்தில், 1,555 டாலர் அடுத்த இலக்காகும்.
செம்பு
செம்பு
விலை கடந்த வாரம் ஆரம்பம் முதல் சரிந்து, வர்த்தகமாகி வந்தது. இருந்த
போதிலும், வார இறுதி நாளான வெள்ளியன்று வெளியான சீனாவின் தொழில் துறை
வளர்ச்சி குறியீட்டு எண், எதிர்பார்த்ததை காட்டிலும் உயர்ந்து
வந்தது. அதன் காரணமாக, தொழில் துறை தேவை அதிகரிக்கக் கூடும் என்ற
காரணத்தால், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளான செம்பு
மற்றும் இதர மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.
செம்பு உலோகத்தை, உலகில் அதிக அளவில் தொழிற்சாலை உபயோகத்துக்கு பயன்படுத்தும் நாடு, சீனா.எனவே, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, கமாடிட்டி பொருட்களின் விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த
ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு
வர, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சில்
ஈடுபடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும், விலை உயர காரணமாக அமைந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|