பதிவு செய்த நாள்
03 நவ2019
23:59
சொந்த
வீடு வாங்க விரும்புகிறவர்கள், வீட்டின் அமைவிடம்,
வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க
வேண்டும். இவற்றோடு, புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு
திட்டங்களை நாடுவதா அல்லது உடனடியாக பயன்படுத்தக்கூடிய, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நாடுவதா
எனும் கேள்வியும் முக்கியமாக எழலாம். தற்போதைய சூழலில், கட்டி
முடிக்கப்பட்ட வீடுகளை நாடுவதில் உள்ள சாதகமான அம்சங்கள்:
தாமதம் இல்லை:
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கும் போது, குடியிருப்பு திட்டம் தாமதமாகும் அபாயம் இருப்பதில்லை.திட்டம்
முடியவும், குடியிருப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படவும்
காத்திருக்க வேண்டியிருக்காது. பல்வேறு காரணங்களால், ரியல்
எஸ்டேட் திட்டங்கள் தாமதமாக வாய்ப்புள்ள சூழலில் இதுமுக்கிய சாதகம்.
எல்லாம் தெளிவு:
கட்டி முடிக்கப்பட்ட வீடு எனில்,பயனாளிக்கு எல்லா அம்சங்களும் தெளிவாக இருக்கும். வீடு, அறைகளின் அளவு, பார்க்கிங், வசதிகள் உள்ளிட்ட அனைத்துஅம்சங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.இது, வாங்கும் முடிவை எளிதாக்கும் என்பதால்எந்த குழப்பமும்
இருக்காது.
வாடகை
செலவு:
வீட்டுக்கடன் வசதி பெறும் போது, கடனுக்கான மாதத் தவணையை
செலுத்த வேண்டும். கட்டப்பட்டு வரும் திட்டம் எனில், மாதத் தவணை
மற்றும் வாடகை இரண்டும் கொடுக்க வேண்டிய நிலை வரும். கட்டி
முடிக்கப்பட்ட வீட்டில் உடனே வசிக்கத் துவங்கலாம் என்பதால்,
மாதத் தவணை மட்டும் செலுத்த துவங்கலாம்.
ஜி.எஸ்.டி., சாதகம்:
ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்ட நிலையிலும், குடியிருப்பு திட்டங்களுக்கு உள்ளீடு வரிக்கு ஏற்ப,ஜி.எஸ்.டி.,
விதிக்கப்படும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி.,
பொருந்தாது
என்பதால், இந்த வரியை மிச்சம் செய்ய முடியும். ஆனால்,
கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு கூடுதலாக பணம் கொடுக்க
வேண்டியிருக்கலாம்.
வரிச்சலுகை:
வீட்டுக்கடன் மூலம் வீடு
வாங்கும் போது வரிச்சலுகையை பெற முடியும். வீட்டுக்
கடனுக்கான
மாதத் தவணையின் வட்டி தொகை, வருமான வரிச்சலுகைக்கு உரியது.
மேலும், முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கான சலுகையும்
இருக்கிறது. கட்டி
முடிக்கப்பட்டு, வீட்டில் வசிக்கும் போதே இந்த
சலுகைகளை பெற முடியும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|