பதிவு செய்த நாள்
05 நவ2019
03:17
புதுடில்லி:அமேசான், பிளிப்கார்ட் ஆகிய மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக, நாடு தழுவிய போராட்டத்தை துவங்க உள்ளதாக, அனைந்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர், பிரவீன் காந்தல்வால் கூறியதாவது:அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை, அன்னிய முதலீட்டு கொள்கை விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை. மேலும், நாட்டின் சில்லரை வணிகத்தையும் இவை அழிக்கின்றன. இந்த நிறுவனங்கள், பிற நிறுவனங்களை ஒழிக்கும் வகையில் விலை, மிக அதிக தள்ளுபடி, சரக்குகளை தங்கள் பிடியில் வைத்துக் கொள்வது என, பலவற்றை தொடர்ந்து செய்து வருகின்றன.
இவர்களின் இந்த போக்கினால், விரைவில் இவர்களுக்கு எதிராக, தேசிய அளவிலான இயக்கத்தை துவங்க உள்ளோம். டில்லியில், 10 தேதி, தேசிய அளவிலான நிர்வாக சபை கூட்டத்தை நடத்த உள்ளோம். 13ம் தேதி, அனைத்து, பார்லி., உறுப்பினர்களிடமும் இது குறித்து மனு கொடுக்க இருக்கிறோம். 20ம் தேதி, 200க்கும் மேற்பட்ட நகரங்களில் தர்ணா நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். டிச., 2ல், அனைத்து மாநில தலைநகரங்களிலும் வர்த்தகர்கள் பேரணி நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|