பதிவு செய்த நாள்
05 நவ2019
23:41
புதுடில்லி:நாட்டின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை மாற்றுவதற்கான முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.
இது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவர்கூறியதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான, புதிய அடிப்படை ஆண்டு குறித்து, மத்திய புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இன்னும் சில மாதங்களில் முடிவு செய்யும்.தற்போது அடிப்படை ஆண்டாக, 2011 –- 12ம் ஆண்டு உள்ளது; இதை 2017 – -18 ஆக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இது குறித்து இதுவரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. நிபுணர்கள் குழு, தங்கள் கருத்தை இறுதி செய்வதற்கு முன், மேலும் சில தரவுகளுக்காக காத்திருக்கின்றனர். அதனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.எப்படியும் அடுத்த சில மாதங்களுக்குள்ளாக முடிவு எடுக்கப்பட்டு விடும்.தொழில் துறை ஆண்டு கணக்கெடுப்பு மற்றும் நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு குறித்ததகவலுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|