ஜி.டி.பி., அடிப்படை ஆண்டு மாற்றும் முயற்சியில் அரசு ஜி.டி.பி., அடிப்படை ஆண்டு மாற்றும் முயற்சியில் அரசு ...  வர்த்தக போரால் இந்தியாவிற்கு லாபம் வர்த்தக போரால் இந்தியாவிற்கு லாபம் ...
சேவைகள் துறை வளர்ச்சி சரிவு செப்டம்பரை தொடர்ந்து அக்டோபரிலும் வளரச்சி குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2019
23:47

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக, சரிவை கண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை அடுத்து, அக்டோபரிலும் தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.

‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை வெளியிட்டுஉள்ளது.

ஆய்வறிக்கை

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி-–ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ., குறியீடு 49.2 புள்ளிகளாக குறைந்துள்ளது.இருப்பினும், இது அதற்கு முந்தைய மாதமான, செப்டம்பரை விட சற்று அதிகமாகும்.



கடந்த செப்டம்பர் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சி, 48.7 புள்ளிகளாக சரிவில் இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.இந்த வகையில் அக்டோபர் மாதத்தில், இக்குறியீடு, 49.2 புள்ளிகளாகவும், செப்டம்பர் மாதத்தில், 48.7 புள்ளிகளாகவும் உள்ளதை அடுத்து, தொடர்ந்து இரண்டு மாதங்களாக சேவைகள் துறை வளர்ச்சி சரிவை கண்டுள்ளது.


நடவடிக்கை

இதற்கு முன், 2017ல் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஆண்டில் இரண்டாவது காலாண்டில், தொடர்ந்து இரண்டு மாதங்கள், சேவைகள் துறை வளர்ச்சி சரிவை கண்டது.அதன் பின், இப்போது தான் தொடர் சரிவை கண்டிருக்கிறது.ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.



தொழிற்சாலைகளுக்கான, ‘ஆர்டர்’ மற்றும் உற்பத்தி ஆகியவை குறைந்தது இதற்கு காரணமாக அமைந்தது.தற்போது சேவைகள் துறையில் வளர்ச்சி சரிந்ததற்கு, தேவைகள் குறைந்தது தான் காரணம்.இந்த சரிவு, ரிசர்வ் வங்கி, 1.35 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்திருந்தும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தும், அவை இதுவரை சிறிய அளவிலேயே தொழில் நடவடிக்கைகளுக்கு தெம்பு ஊட்டியுள்ளதை குறிப்பதாகவே அமைந்துள்ளது.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் சேவைகள் துறை சரிவில் சிக்கிஇருப்பதைப் பார்க்கும்போது, சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது. தேவைகள் குறைந்ததை அடுத்து,நிறுவனங்கள் தங்கள் வணிக செயல்பாட்டைகுறைத்துள்ளன. இந்த சரிவு, முதலீடு மற்றும் வேலை மீதான வணிக நம்பிக்கையை குறைக்க கூடும்.

பாலியானா டி லிமா

தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)