பதிவு செய்த நாள்
07 நவ2019
00:01
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, நாட்டின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.6 சதவீதமாக இருக்கும் என, திருத்தி அறிவித்துள்ளது, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்!’
இதற்கு முன், நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.4 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்திருந்தது. இப்போது அதை, 3.6 சதவீதமாக உயர்த்தி, அறிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில், அரசின் வருவாய் குறைவாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதற்கு, கார்ப்பரேட் வரி சலுகை மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி காரணமாக குறைந்து இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் ஆகியவை காரணமாக அமைந்து உள்ளது.
அரசின் கார்ப்பரேட் வரி சலுகை உள்ளிட்ட அறிவிப்பால், அரசுக்கு நடப்பு நிதியாண்டில், 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருக்கும் என, மத்திய நிதியமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இதையடுத்து, நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என, கருதுகிறோம். மேலும், வருவாய் வளர்ச்சி, 13.1 சதவீதமாக இருக்கும் என, முன்னர் கணித்திருந்தோம். அதை இப்போது, 8.3 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளோம்.இவ்வாறு பிட்ச் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|