பதிவு செய்த நாள்
07 நவ2019
00:04
புதுடில்லி:பழைய வாகனங்களை பிரித்தெடுக்கவும், மறுசுழற்சி செய்யவும், ஒரு கூட்டு நிறுவனத்தை, ‘மாருதி சுசூகி’யும், ‘டொயோட்டா சுஷோ’ நிறுவனமும் சேர்ந்து அமைக்க இருக்கின்றன.
இது குறித்து, இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளதாவது:‘மாருதி சுசூகி டொயோட்சு’ எனும் இந்த கூட்டு நிறுவனத்தில், மாருதி சுசூகி நிறுவனம், 50 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். மீதி, 50 சதவீத பங்குகள், டொயோட்டா சுஷோ கார்ப்பரேஷன் மற்றும் டொயோட்டா சுஷோ இந்தியா ஆகிய நிறுவனங்களின் வசம் இருக்கும். மாருதி சுசூகி நிறுவனம், நொய்டாவில் வாகனங்களை பிரித்தெடுப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது ஆகியவற்றுக்கான தொழிற்சாலையை அமைக்கும்.
இந்த ஆலை, அடுத்த நிதியாண்டில் அமைக்கப்படும்.இந்த ஆலை, மாதம் ஒன்றுக்கு, 2,000 வாகனங்களை பிரித்தெடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதை தொடர்ந்து, நாடு முழுக்க மேலும் பல தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சாலை பயன்பாட்டுக்கான தகுதியை இழந்த வாகனங்களை, முகவர்கள் மூலமாகவும்,நேரிடையாக வாடிக்கையாளர்கள் மூலமாகவும் இந்த புதிய நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|