பதிவு செய்த நாள்
07 நவ2019
00:07
புதுடில்லி:அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதலால், இந்தியா கூடுதல் ஏற்றுமதி மூலம், 5,361 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, ‘சீனா மீதான, அமெரிக்காவின் தடை காரணமான வர்த்தகம் மற்றும் வர்த்தக மாற்ற விளைவுகள்’ எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது; இதன் மதிப்பு, 5,361 கோடி ரூபாய்.
இந்த மோதல் போக்கால், நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 1.49 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, வேறு நாடுகளை நோக்கி திரும்பியுள்ளது.ஏற்றுமதி வேறு நாடுகளின் பக்கம் திசை திரும்பியதால், தைவான், மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு நல்ல பயன் கிட்டியுள்ளது.கொரியா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு வாய்ப்பு குறைவு தான் என்றாலும், கிடைத்த பயன் அதிகமே. 6,390 கோடியிலிருந்து, 10 ஆயிரத்து, 650 கோடி ரூபாய் அளவுக்கு பலன் கிடைத்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|