பதிவு செய்த நாள்
07 நவ2019
00:08
புதுடில்லி:டி.வி.எஸ்., குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனுக்கு, டோக்கியோவில் நடைபெற்ற விழா ஒன்றில், மதிப்புமிக்க, ‘டெமிங்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் இந்திய தொழிலதிபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெமிங் விருது, நிறுவனங்களில் முழு தர மேலாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நபர்களுக்கு, உலகளவில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விருதாகும். டெமிங் விருதுக்கான நிதியுதவியை, ’ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் சங்கம்’ வழங்கி வருகிறது.
இந்த விருதை ஏற்று, சீனிவாசன் கூறியதாவது:இந்த விருதின் மூலம், நான் உண்மையிலேயே மிகவும் கவுரவிக்கப்பட்டுள்ளேன். சுந்தரம் கிளேட்டன் மற்றும் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியில், முழு தர மேலாண்மைக்காக கடுமையாக உழைத்த, என் சகாக்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவரின் உழைப்புக்கான சான்றாக இந்த விருது விளங்குகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராகவும், தரத்திற்கான தேசிய குழுவின் தலைவராகவும் இருந்து, நாடு முழுக்க, டி.கியு.எம்., எனும், முழு தர மேலாண்மை மேம்பாட்டுக்காக சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|