பதிவு செய்த நாள்
08 நவ2019
00:09
சென்னை:‘‘நடப்பு, நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின், நிகர லாபம், 15 சதவீதம் உயர்ந்து, 193.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின் நிர்வாக இயக்குனர் என்.காமகோடி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின், மொத்த வணிகம், 15 சதவீதம் உயர்ந்து, 73 ஆயிரத்து, 730 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில், 64 ஆயிரத்து, 319 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்பு தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 40 ஆயிரத்து, 451 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டில், 34 ஆயிரத்து, 534 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல, வங்கி வழங்கிய கடன் தொகை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33 ஆயிரத்து, 279 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 29 ஆயிரத்து, 785 கோடி ரூபாயாக இருந்தது.நிகர லாபம், 15 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 193.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 167.99 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வராக்கடன், 1.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவிய போதிலும், சிட்டி யூனியன் வங்கியின் வணிகம் ஸ்திரமாக உள்ளது.நடப்பு நிதி ஆண்டின், நான்காவது காலாண்டில், 50 கிளைகள் புதிதாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதம் கிளைகள், தமிழகத்தில் திறக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|