பதிவு செய்த நாள்
09 நவ2019
23:35
சென்னை:கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர்., 9’ என்ற, ஆண்டு கணக்கு படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது.இதை, அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்வது அவசியம். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், 30ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன், அனைத்து வணிகர்களும் படிவம் 9ஐ தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம் 9’ஐ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும்.
அக்டோபருடன் முடிய இருந்த அவகாசம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி உடன், இதற்கான அவகாசம் முடிகிறது.இதற்குள், ஆண்டு கணக்கு தாக்கல் செய்யாத வணிகர்கள், தாக்கல் செய்ய அறிவுறுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|