பதிவு செய்த நாள்
09 நவ2019
23:38
பீஜிங்:சீனாவின் சில்லரை விலை பணவீக்க விகிதம், 2012ம் ஆண்டுக்குப் பிறகு, எப்போதும் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில் அதிகளவில் உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபரில், சீனாவின் சில்லரை விலை பணவீக்க விகிதம், 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் புள்ளிவிபரங்கள் துறை தெரிவித்துள்ளது.இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், பன்றி இறைச்சியின் விலை அதிகரிப்பு தான் என, அந்நாட்டின் புள்ளி விபரங்கள் துறை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக, 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகள் அழிக்கப்பட்டன என, அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, பன்றிக்குப் பதிலாக, புரத சத்துக்காக, மாட்டிறைச்சி, கோழி, வாத்து, முட்டை உள்ளிட பிறவற்றை நுகர்வோர் அதிகம் பயன்படுத்த துவங்கினர். இதையடுத்து, இவற்றின் விலையும் சந்தையில் அதிகரித்துவிட்டது.இந்த பணவீக்க உயர்வை கண்டு, சீனத் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்று டிரிவியம் சீனா எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்,1989ம் ஆண்டில் நடைபெற்ற, தியனன்மென் சதுக்க போராட்டத்துக்கான அடிப்படை காரணங்களில் ஒன்று, இந்த பணவீக்கம். அந்த ஆண்டில் பணவீக்க விகிதம், 18.25 சதவீதமாக இருந்தது என்றும், டிரிவியம் சீனா குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|