பதிவு செய்த நாள்
09 நவ2019
23:42
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 24 ஆயிரத்து, 992 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், இம்மாதம், 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 31.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இம்மாதம் 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, இதுவரை இல்லாத வகையில், 31.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய செலாவணி அதிகரிப்பதற்கு, எப்.சி.ஏ., எனும் வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு உயர்வு காரணமாக அமைந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், எப்.சி.ஏ., 22 ஆயிரத்து, 720 கோடி ரூபாய் அதிகரித்து, 29.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 2,137 கோடி ரூபாய் அதிகரித்து, 1.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|