பதிவு செய்த நாள்
09 நவ2019
23:45
பெங்களூரு:நாட்டின் பிளாஸ்டிக் ஏற்றுமதி, 6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்குமான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதே இதற்கு காரணம்.
இது குறித்து, பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், ரவிஷ் காமத் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், நாட்டின் பிளாஸ்டிக் ஏற்றுமதி, 6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 30 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 32 ஆயிரத்து, 589 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.நாட்டின் ஏற்றுமதியில், பிளாஸ்டிக்கின் பங்களிப்பு, 2.7 சதவீதம். தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சிக்கு காரணம், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவே ஆகும்.
மேலும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக மோதல் போக்கு, ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரை, பிளாஸ்டிக் ஏற்றுமதி மந்தமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|