பதிவு செய்த நாள்
09 நவ2019
23:47
ஐதராபாத்:–நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்ப வணிக நிறுவனங்களில், நிறுவனத்தை அடுத்து யார் நிர்வகிப்பது என்பது குறித்த திட்டமிடல் எதுவும் இல்லாமல் இருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குடும்ப நிறுவனங்களில், ஓய்வுக்கான காலத்தை நெருங்கும் நிலையில் இருக்கும் அதன் நிறுவனர்கள், தங்களுக்கு அடுத்து யார் நிறுவனத்தை நிர்வகிப்பது என்பது குறித்த எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் இருப்பதாக, ’இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ ஆய்வு தெரிவித்துள்ளது.இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
:நாட்டில் உள்ள, 53 குடும்ப வணிக நிறுவனங்களில் ஆய்வு எடுக்கப்பட்டது.பல நிறுவனங்கள், 1980களின் இறுதி மற்றும், 1990களின் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டவை. இந்தியாவில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னணியில் இந்நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனர்கள், தங்கள் ஓய்வு குறித்தோ அல்லது தங்களுக்குப் பிறகு யார் நிர்வகிப்பது என்பது குறித்தோ எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் உள்ளனர்.இருப்பினும், அடுத்த தலைமுறை இளைஞர்கள் பொறுப்பேற்க தயாராக உள்ளனர்.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|