பதிவு செய்த நாள்
10 நவ2019
23:47
சராசரி
முதலீட்டாளர்களை பொருத்தவரை பங்கு முதலீட்டின் பலனை பெற,
மியூச்சுவல் பண்ட் முதலீடே சிறந்த வழி. எனினும், பங்குச்சந்தையில்
ஆர்வம் உள்ள பலர், நேரடியாக பங்குகளை வாங்க விரும்பலாம். நேரடி
பங்கு முதலீடு என்பது, எல்லோருக்குமானது அல்ல என்பதோடு, ஆழமான
ஆய்வு தேவைப்படுவது. நேரடி பங்கு முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன்,
அறிந்திருக்க வேண்டிய அம்சங்கள்:
பங்குகள் தேர்வு:
பங்கு
முதலீட்டில் சரியான பங்குகளை தேர்வு செய்வது முக்கியம். ஒருவர்
தனக்கு தெரிந்தவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என,
வலியுறுத்தப்படுகிறது. எனவே,ஆர்வம் உள்ள துறைகளை தொடர்ந்து கவனித்து,அதனடிப்படையில் நல்ல பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்; அதே நேரத்தில் பரவலாக்கமும் முக்கியம்.
பங்கு வெளியீடு:
புதிய முதலீட்டாளர்கள், ஐ.பி.ஓ., எனகுறிப்பிடப்படும், பொது பங்கு வெளியீடு மூலம்
பங்குகளைவாங்கலாம். பங்கு வெளியீடு தொடர்பான தகவல்கள்அடிப்படையில், நிறுவன பங்கு ஏற்றதா என, தீர்மானிக்கலாம். ஆனால், இந்தியாவில் எதிர்பார்த்த பலன் தந்த பங்கு
வெளியீடுகள் குறைவு என, கருதப்படுகிறது.
ஏற்ற, இறக்கம்:
பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் போது,எல்லாம் உற்சாகம் அளிக்கும். ஆனால், சந்தை சரியும் போது, வலியும், வேதனையும் உண்டாகலாம். எனவே, சந்தையின்ஏற்ற, இறக்க போக்கை புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு காரணமான பொருளாதார அம்சங்களையும் மனதில் கொண்டு, பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
ஆய்வு தேவை:
பங்குகளை தேர்வு செய்ய ஆய்வும், அலசலும்முக்கியம்.
குறிப்பிட்ட நிறுவனத்தின்
அடிப்படை அம்சங்களை அலசி ஆராய வேண்டும்.
சந்தை சார்ந்த மற்ற தகவல்களையும்
கவனிக்க வேண்டும். பங்குகளை
அலசுவதற்குபின்பற்றப்படும், ‘டெக்னிகல் அனாலசிஸ்’ போன்றவழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.
எப்படி வாங்குவது?
பங்குகளில் பரிவர்த்தனை செய்வதற்கான வழிகளையும் அறிந்திருக்க வேண்டும். இதற்கு என,இணையதளங்கள்
மற்றும் செயலிகள் இருக்கின்றன என்றாலும், புரோக்கர் கட்டணம்,
பரிவர்த்தனை கட்டணம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். பங்கு
பரிந்துரைகளை
கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|