பதிவு செய்த நாள்
12 நவ2019
00:50
புதுடில்லி:காதலர் தினத்துக்கு மாற்றாகக் கொண்டாடப் படும், ஒற்றையர் தினத்தில், சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ மின்னணு வர்த்தக நிறுவனத்தின் விற்பனை, இதுவரை இல்லாத சாதனையை படைத்து உள்ளது.
அலிபாபாவின் ஒற்றையர் தின விற்பனை, ஆரம்பித்த, 16 மணி, 31 நிமிடங்களில், 2.26 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. கடந்த ஆண்டில் இதுவே, 2.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.‘டெலிவரி ஆர்டர்’ களின் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டிஉள்ளது. விற்பனை ஆரம்பிக்கப்பட்ட முதல், 1 நிமிடம், 8 வினாடிகளில், 1 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்று தீர்ந்துள்ளன.முதல் ஒரு மணி நேரத்தில், 85 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.
ஒற்றையர் தினம், நான்கு, ஒன்று வரும் நாளான, 11வது மாதம், 11ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு, அலிபாபா, 2009ம் ஆண்டில், முதல் சிறப்பு விற்பனையை அறிமுகம் செய்தது.இந்த ஆண்டில், 78 நாடுகளிலிருந்து, இரண்டு லட்சம் பிராண்டு பொருட்கள் விற்பனைக்கு வந்தன.மேலும், 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பொருட்கள், தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|