பதிவு செய்த நாள்
13 நவ2019
23:30
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில், 4.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், 3.99 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில், 4.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.மேலும், இது ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான, 4 சதவீதத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், சில்லரை பணவீக்கம், 3.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து காணப்பட்டதால், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
அக்டோபரில் நுகர்வோர் உணவு விலை பணவீக்கம், 7.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த செப்டம்பரில், 5.1 சதவீதமாக இருந்தது.எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் தவிர்த்த முக்கிய பொருட்களின் சில்லரை பணவீக்கம், 3.5 சதவீதமாகும். இது செப்டம்பர் மாதத்தில், 4 சதவீதமாக இருந்தது.பருப்புகளின் சில்லரை பணவீக்கம், 11.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் இது, 8.4 சதவீதமாக இருந்தது.
காய்கறிகளின் பணவீக்கம் செப்டம்பரில், 11.4 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில், 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|