சில்லரை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு சில்லரை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு ...  மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது ...
வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:34

புதுடில்லி:அடுத்த பட்ஜெட்டில், நேரடி மற்றும் மறைமுக வரிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து, இதுவரை இல்லாத வகையில், முதன் முதலாக, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம், நிதியமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.

வரும் பிப்ரவரி, 1ம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில், 2020- - 21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.இந்நிலையில் நிதியமைச்சகம், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம், நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறித்த ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இது குறித்து, நிதியமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்ஜெட்டுக்கு முன், மத்திய நிதியமைச்சகம் பல்வேறு துறைகளிடம் ஆலோசனைகளை துவக்கி உள்ளது. இந்நிலையில், நிதியமைச்சகத்தின் கீழுள்ள வருவாய் துறை இம்மாதம், 11ம் தேதியன்று, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.இந்த சுற்றறிக்கையில், தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வருமான வரி விகிதத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை, கலால் மற்றும் சுங்க வரி உள்ளிட்ட மறைமுக வரிகளில் என்ன மாற்றங்கள் தேவை என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.


தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம் இப்படி பரிந்துரையை கோருவது, இதுவே முதன் முறையாகும்.பரிந்துரைகளை உற்பத்தி, விலை வருவாய் உள்ளிட்ட புள்ளி விபர தரவுகளின் அடிப்படையில் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர், 21ம் தேதிக்குள் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை, 5ம் தேதியன்று, தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் பிறகு செப்டம்பர், 20ம் தேதி, மினி பட்ஜெட்டுக்கு ஒப்பான, கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தார். இதனால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, தனிநபர் வருமான வரி தொடர்பாகவும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியை மந்த நிலையிலிருந்து மீட்க, தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள் செய்வதுடன், அவர்கள் கைகளில் அதிக பணம் புழங்க வகை செய்ய வேண்டும் என, பலர் தெரிவித்து வருகின்றனர்.ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 5 சதவீதமாக சரிந்துவிட்டது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்க, இந்த வருமான வரி மாற்றங்கள்கைகொடுக்கும் என கருதப்படுகிறது.


மறைமுக வரியில், கலால் வரி, சுங்க வரி குறித்த ஆலோசனைகள் மட்டுமே கேட்கப்பட்டு உள்ளன; ஜி.எஸ்,டி., குறித்து கேட்கப்படவில்லை. ஜி.எஸ்.டி., குறித்து, மாநில நிதியமைச்சர்கள் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி., கவுன்சிலே முடிவு செய்யும் என்பதால், அது குறித்து கேட்கப்படவில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)