பதிவு செய்த நாள்
15 நவ2019
23:34
புதுடில்லி:தொலைதொடர்பு நிறுவனமான, ‘வோடபோன் ஐடியா’ செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 51 ஆயிரம் கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் இப்படிப்பட்ட இழப்பை இதுவரை சந்தித்ததில்லை. நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம், 50 ஆயிரத்து, 921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்பட்டிருக்கும் நிலை தான்.வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது வருவாயைக் குறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில், இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு, 92 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை வழங்க, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதன் காரணமாக, வோடபோன் ஐடியாவின் நஷ்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வோடபோன் நிறுவனம், அதன் வணிகத்தை தொடர்வது என்பது அரசின் ஆதரவு மற்றும் நிவாரணத்தை பொறுத்தே உள்ளது என, அறிவித்திருந்தது.இந்நிலையில், வோடபோன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிக் ரீடு, வோடபோன் ஐடியா நிறுவனத்தில் மேற்கொண்டு முதலீடு செய்யும் திட்டம் எதுவுமில்லை என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|