பதிவு செய்த நாள்
15 நவ2019
23:36
சென்னை:நடப்பு, 2019 – 20ம் நிதி ஆண்டின், இரண்டாம் காலாண்டில், ‘ரெப்கோ’ வீட்டு நிதி நிறுவனத்தின் நிகர லாபம், 51 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 100 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இது குறித்து, ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரெப்கோ வீட்டு நிதி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 14 சதவீதம் அதிகரித்து, 331.7 கோடி ரூபாயாக உள்ளது.இது போல நிகர வட்டி வருவாய், 4.3 சதவீதமாக உயர்ந்து, 123.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிகர லாபம், 51 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 100.6 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், 694.5 கோடி ரூபாய், கடன் கொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 701.8 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வாராக்கடன், 4.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது, 2018 செப்டம்பரில், 3.6 சதவீதமாக இருந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில், நிறுவனத்தின், 148 கிளைகள் செயல்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|