பதிவு செய்த நாள்
19 நவ2019
06:15
பெங்களூரு : நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில், நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மத்திய நிலை ஊழியர்கள், வேலையிழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார், டி.வி.மோகன்தாஸ் பாய்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான, மோகன் தாஸ் இது குறித்து, மேலும் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப துறையில் இப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வேலை இழப்புகள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். மேற்கு நாடுகளைப் போல, இந்தியாவிலும் ஒரு துறையானது முதிர்ச்சி அடைகிறது. இதனால், மத்திய நிலையில் இருப்பவர்கள், வேலையிழப்புக்கு ஆளாவார்கள்.
துறையானது முதிர்ச்சி அடைவதால், இவர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப மதிப்பு கொண்ட வர்களாக இல்லாமல் ஆகிவிடுவார்கள். மேலும், மந்த நிலையின் போது, மத்திய நிலை ஊழியர்கள் வேலையிழப்பது என்பது, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், வேலை இழப்பவர்களில், 80 சதவீதம் பேர் பொதுவான தொழில்களில் வேலைவாய்ப்புகளை பெறுவர், அவர்கள் நிபுணர்களாக இருந்தால். இவ்வாறு, மோகன்தாஸ் பாய் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|