பதிவு செய்த நாள்
21 நவ2019
06:48
சென்னை : சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சயோமி, ஏற்றுமதியை அதிகரிக்க, அரசு, மேலும் சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரியுள்ளது.
சயோமி நிறுவனம் இந்தியாவில், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இனைந்து, ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. மேலும் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதியையும் துவங்கி உள்ளது. இந்திய அரசு, சி.இ., தொழில்நுட்ப சான்றை வழங்குவதற்கான ஆய்வகங்களை இந்தியாவில் அமைத்தால், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கு சாதனங்களை ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கும் என, சயோமி தெரிவித்துள்ளது.
இது குறித்து, சயோமி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.முரளி கிருஷ்ணன் மேலும் கூறியதாவது:மொபைல் போன் சந்தையில், சயோமியின் பங்கு, 27.9 சதவீதமாகும். இந்தியாவில் விற்கப்படும், 99 சதவீத, மி போன்கள், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவையாகும். கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது, போன் விற்பனை, 37 சதவீதமும், ‘டிவி’ விற்பனை, 50 சதவீதமும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|