ஏற்றுமதிக்கு சலுகைகள் சயோமி கோரிக்கை ஏற்றுமதிக்கு சலுகைகள் சயோமி கோரிக்கை ...  வர்த்தக போர் வாய்ப்பை பயன்படுத்த முயற்சி வர்த்தக போர் வாய்ப்பை பயன்படுத்த முயற்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏற்றத்தில் பி.எஸ்.என்.எல்., – ஜியோ இறக்கத்தில் வோடபோன், ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2019
06:49

புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள், 49 லட்சம் உபயோகிப்பாளர்களை இழந்துள்ளது.

ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஆகிய நிறுவனங்கள், அதிக நபர்களை பெற்றுள்ளது என, தொலைதொடர்பு கட்டுப் பாட்டு அமைப்பான, டிராய் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., உள்ளிட்ட, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 117.37 கோடியாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 117.1 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை, நகர பகுதிகளில் குறைந்து, 65.91 கோடியாகவும், கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து, 51.45 கோடியாகவும் உள்ளது.ஏர்டெல் நிறுவனம், செப்டம்பரில், 23.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 32.55 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல் வோடபோன் ஐடியா, 25.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து, 37.24 கோடி பேர்களுடன் உள்ளது.

அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோவில், 63.83 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மொத்த உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை, 35.52 கோடியாக அதிகரித்துள்ளது. எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் அதன், 33.93 லட்சம் உபயோகிப்பாளர்களில் 8,717 பேர் செப்டம்பரில் வெளியேறிஉள்ளனர்.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்து, உபயோகிப்பாளர் எண்ணிக்கை, 11.69 கோடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)