பதிவு செய்த நாள்
21 நவ2019
06:49
புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள், 49 லட்சம் உபயோகிப்பாளர்களை இழந்துள்ளது.
ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஆகிய நிறுவனங்கள், அதிக நபர்களை பெற்றுள்ளது என, தொலைதொடர்பு கட்டுப் பாட்டு அமைப்பான, டிராய் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., உள்ளிட்ட, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 117.37 கோடியாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 117.1 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை, நகர பகுதிகளில் குறைந்து, 65.91 கோடியாகவும், கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து, 51.45 கோடியாகவும் உள்ளது.ஏர்டெல் நிறுவனம், செப்டம்பரில், 23.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 32.55 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல் வோடபோன் ஐடியா, 25.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து, 37.24 கோடி பேர்களுடன் உள்ளது.
அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோவில், 63.83 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மொத்த உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை, 35.52 கோடியாக அதிகரித்துள்ளது. எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் அதன், 33.93 லட்சம் உபயோகிப்பாளர்களில் 8,717 பேர் செப்டம்பரில் வெளியேறிஉள்ளனர்.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்து, உபயோகிப்பாளர் எண்ணிக்கை, 11.69 கோடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|