பதிவு செய்த நாள்
21 நவ2019
06:55
நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா, 2019ம் ஆண்டின், பார்ச்சூன் வணிகர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பார்ச்சூன் இதழ், அந்த ஆண்டின் சிறந்த வணிகர் பட்டியலை தொகுத்து வழங்கும். அந்த வகையில், இந்த ஆண்டு பட்டியலில், முதலிடத்தை, இந்தியாவில் பிறந்த சத்யா நாதெள்ளா பிடித்துள்ளார்.மொத்தம், 20 பேர் கொண்ட இந்த பட்டியலில், மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பங்கா மற்றும் அரிஸ்டா நிறுவன தலைவர், ஜெய்ஸ்ரீ உல்லால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா, 8வது இடத்தையும், ஜெய்ஸ்ரீ உல்லால், 18வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சத்யா நாதெள்ளா குறித்து பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளதாவது: நாதெள்ளா, பில்கேட்ஸை போல ஒரு நிறுவனரும் அல்ல, அவரது முன்னோடி ஸ்டீவ் பால்மரை போல, ஒரு பெரிய ஆளுமை கொண்ட விற்பனை தலைவரும் அல்ல. கடந்த, 2014ல் மைக்ரோசாப்டை வழிநடத்த அறிவிக்கப்பட்ட, ‘ஆச்சரிய தேர்வு’ அவர்.இவ்வாறு பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து சத்யா நாதெள்ளா கூறியதாவது:தலைமை செயல் அதிகாரிகள் ஓர் அற்புதமான குழுவை கொண்டிருந்தால் மட்டுமே, அவர்கள் செய்ய விரும்புவதை செய்ய முடியும். அப்படிப்பட்ட குழுவை கொண்டிருப்பதற்கு நான் கொடுத்து வைத்தவனாக இருக்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|