பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம் ...  முதலடி எடுத்து வைத்துள்ளது அரசு: அரசின் பங்கு விற்பனை முடிவுக்கு, ‘பிக்கி’ பாராட்டு முதலடி எடுத்து வைத்துள்ளது அரசு: அரசின் பங்கு விற்பனை முடிவுக்கு, ... ...
தொலை தொடர்பு நிறுவன சலுகைக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
01:56

புதுடில்லி: தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை, 2022ம் ஆண்டு வரை செலுத்தலாம் என அரசு அவகாசம் வழங்கியது,

இத்துறைக்கு மிகப்பெரிய ஆறுதலாகும் என, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொலைபேசி சேவைகள் வழங்க அனுமதி பெற்ற நிறுவனங்கள், தங்களுடைய சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில், குறிப்பிட்ட சதவீதத்தை, ஆண்டு அனுமதி கட்டணமாகவும், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமாகவும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.


இதையடுத்து, ‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ உள்ளிட்ட நிறுவனங்கள், பெரும் தொகையை உடனடியாக கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகின. இதனால், இரண்டாம் காலாண்டில், இந்நிறுவனங்களின் நஷ்டம், வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. வோடபோன் ஐடியா நிறுவனம், தொடர்ந்து தொழில் நடத்த முடியுமா என அஞ்சுவதாக தெரிவித்தது.இதையடுத்து, தற்போது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக, சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு.


இது குறித்து, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல், ராஜன் மேத்யூஸ் கூறியதாவது: ‘ஸ்பெக்ட்ரம்’ தொகையை செலுத்துவதற்கான கால நீட்டிப்பு, கட்டண அதிகரிப்பு மற்றும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் ஆகியவை குறித்த பரிசீலனை என, மூன்று அம்சங்களும் தொலை தொடர்பு நிறுவனங்களை மூச்சு விட வைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)