அரவணைத்துச் செல்லட்டும் அரசாங்கம்! அரவணைத்துச் செல்லட்டும் அரசாங்கம்! ...  ‘ஆர்காம்’ நிறுவன சொத்துக்கு போட்டி ‘ஆர்காம்’ நிறுவன சொத்துக்கு போட்டி ...
தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2019
02:42

இந்திய வங்கி துறை சார்ந்த கவலைகளும், சந்தேகங்களும் தொடர்ந்து பங்கு சந்தையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள் சார்ந்த கவலைகள், சந்தையை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதித்ததை பார்த்தோம்.ஆனால், 2019ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிலைமை ஒரளவு சரியாகி, அவர்களின் கவலைகள் ஒவ்வொன்றாக நீங்க ஆரம்பித்து விட்டன.மாறாக, பல முன்னணி தனியார் வங்கிகள் தங்கள் நிதி நிலையில் பெரும் சரிவையும், வாரா கடன் பெருக்கத்தையும் சந்தித்தன.ஆட்டம் கண்டுவிட்டன

இதே காலகட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களும் பல சவால்களுக்கு ஆளாகி, நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பல தனியார் வீட்டு கடன் நிறுவனங்களும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பெரிதும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் தொடர்ந்து இயங்குவதே கேள்விக்குறி ஆகியிருப்பதை நாம் கண்டோம்.பங்கு சந்தையில் பல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் நிறுவன பங்குகள் பெரும் சரிவைக் கண்டன.அடுத்து, நடப்பது குறித்து கவலை கலந்த எதிர்பார்ப்புகள் சந்தையில் தெரிகின்றன.

முதலில், நிதி சிக்கல் சூழ்ந்து காணப்படும் தனியார் வங்கிகளை காப்பாற்ற புதிய முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். தனியார் வீட்டு கடன் நிறுவனங்களின் பிரச்னைகள் மீண்டும் பொதுத் துறை வங்கிகளை பாதிக்கும் என்பதால், அவற்றை ரிசர்வ் வங்கியும், அரசும் உடனடியாக சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சூழலை அவை எப்படி அணுகப் போகின்றன என்பதில் அனைவருக்கும் ஆழ்ந்த கவலை இருக்கிறது.இந்த மூன்று வகை நிறுவனங்களும் தங்கள் நிதி நிலையை சீரமைக்க அதிக அவகாசம் இல்லாத சூழ்நிலையில் தவிக்கின்றன.தங்கள் வாராக் கடன்களை மீண்டும் வசூலிக்கவும், புதிய முதலீடுகளை மீண்டும் ஊக்குவிக்கவும், நல்ல வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த நிறுவனங்கள் அவசர முயற்சிகள் எடுத்து, அவற்றில் வெற்றியும் காண வேண்டும்.அவசியம்இதற்கு அரசின் ஒத்துழைப்பும், ரிசர்வ் வங்கியின் முழு ஆதரவும், முதலீட்டாளர்களின் ஆர்வமும், சந்தைக்கு இந்த நிறுவனங்களின் மீது போதுமான நம்பிக்கையும் மிக அவசியம்.பல முதலீட்டு முடிவுகள் வேகமாக எடுக்கப்பட்டு, அவை அனைத்து தரப்புகளின் ஆதரவை பெற்று, நிறுவனங்களுக்கு தேவையான அவசர நிதி திரட்டப்பட்டு, அவற்றின் மூலம் இந்த நிறுவனங்கள் மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்.

நிறுவன தேவைகள் காலத்தோடு நிறைவேற்றப்பட வேண்டும்.இதை அனைவரும் உணர்ந்து நடந்தாலும், சரியான நேரத்தில், காலத்தோடு தீர்வு அமைவது அனைவருக்கும் மிக அவசியம்.அடுத்து வரும் வாரங்களில் இந்த மூன்று வகையான நிறுவனங்களும் தங்கள் சிக்கல்களில் இருந்து மீண்டு, மறுபடியும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி, மீண்டும் முதலீட்டாளர்களின் மதிப்பை பெருவதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்களின் முயற்சிகள் நிறைவேறி வெற்றி பெறுவது, அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)