பதிவு செய்த நாள்
26 நவ2019
02:17
சிங்கப்பூர் : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில், மேலும் மந்தமடையும் என, சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 5 சதவீதமாக குறைந்தது. இது மூன்றாவது காலாண்டில், 4.3 சதவீதமாக மேலும் குறைய வாய்ப்புள்ளது.இந்த காலாண்டில், முக்கியமான நுகர்வு துறையில் உள்ள பலவீனம், தனியார் துறை செயல்பாட்டை பாதிக்கலாம்.மேலும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளன.
மேலும், நுகர்வோர் தேவை குறைந்ததன் காரணமாக, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தயாரிப்புகளும் குறைந்துள்ளன.இந்த காலாண்டில், பொதுத்துறை தவிர்த்து, பெரும்பாலான துறைகள் மந்தநிலையில் இருக்கும் என கருதுகிறோம்.ஜி,வி.ஏ., எனும், மொத்த மதிப்பு சேர்க்கப்பட்டதன் கீழ், வளர்ச்சி, 4.1 சதவீதமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு டி.பி.எஸ்., வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|