தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ...  சென்னையில், ‘சார்ஜர்’ தொழிற்சாலை சென்னையில், ‘சார்ஜர்’ தொழிற்சாலை ...
‘ஆர்காம்’ நிறுவன சொத்துக்கு போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
02:19

புதுடில்லி : முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனம், அனில் அம்பானி நிர்வகித்து வரும், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் எடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இருப்பினும், ஏலம் எடுக்க முன்வந்துள்ளது என்பது தவிர, மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை.ஆர்காம் எனும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது. மீண்டும் முயற்சிஇதையடுத்து, கடன் கொடுத்த நிறுவனங்கள் திவால் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.இந்நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் எடுக்க, ‘பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி இன்பிராடெல்’ ஆகிய நிறுவனங்களும், ‘வார்தே பார்ட்னர்ஸ்’ எனும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமும் கோரியுள்ளன.

தற்போது, ரிலையன்ஸ் ஜியோவும் ஏலம் எடுக்க முன்வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு, 40 நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளன. இதில், ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்டு கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா’ ஆகியவையும் உள்ளன.ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் சொத்துக்களைப் பொறுத்தவரை, ஸ்பெக்ட்ரம், மொபைல் போன் கோபுரங்கள், பைபர் மீடியா ரியல் எஸ்டேட், ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகிய உப நிறுவன சொத்துக்கள் என பல சொத்துக்கள் உள்ளன.

கடந்த, 2018ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்தது.மேலும், 43 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்கள், 1.78 லட்சம் கிலோமீட்டர் நீள பைபர், ஸ்பெக்ட்ரம் உரிமை ஆகியவற்றை வாங்க நடந்த முயற்சி, கடைசியில் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் தோல்வியை தழுவியது.

இப்போது, மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.சட்ட தீர்ப்பாயம் இதற்கிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை, அனில் அம்பானி ராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை, கடன் வழங்கியவர்கள் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. பதவியில் இருந்து பிரச்னைகளை தீர்த்து வைத்து தருமாறு அவை கோரியுள்ளன.இந்நிலையில், வரும் ஜனவரி, 10ம் தேதிக்குள், திவால் நடவடிக்கையை முடித்துவிட வேண்டும் என, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலை அதிகரிப்புபார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள் ஏலம் எடுக்க முன்வருவதாக வந்த செய்திகளால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகள் நேற்று, 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை கண்டன. தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை, 6.67 சதவீதம் அதிகரித்து, 80 பைசாவாக அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கின் விலை, 4.55 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 69 பைசாவாக வர்த்தக இறுதியில் நிலை பெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)