பதிவு செய்த நாள்
26 நவ2019
02:22
பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., நிறுவனங்களில் இதுவரை, 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காமல் இருந்ததற்காக, வாடிக்கையாளர்களிடமிருந்து, 1,996 கோடி ரூபாயை அபராதமாக கடந்த நிதியாண்டில் வசூலித்துள்ளன.
‘சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு, 'குவாலிட்டி ரத்னா' விருதை, இந்திய தொழிலகங்கள் கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., வழங்கி உள்ளது.மும்பை பங்குச் சந்தை, அதன் புதிய உச்சமான, 40 ஆயிரத்து, 889 புள்ளிகளை தொட்டதால் நேற்று, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு,1.81 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது. ‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவனம், எரிபொருள் வழங்குவதில், 100 சதவீதம் தரம், அளவு, பணப்பரிமாற்றம், வெளிப்படைத் தன்மை ஆகியவை இருக்கும் வகையில், அடுத்த தலைமுறை, ‘டிஜிட்டல்’ முயற்சிகளில் இறங்கி உள்ளது.
இந்திய காகித துறை அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 12 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும், காகித நுகர்வு தற்போதைய, 1.5 கோடி டன்னிலிருந்து, 2.4 கோடி டன்னாக அதிகரிக்கும் என்றும், இந்திய காகித தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|