பதிவு செய்த நாள்
27 நவ2019
06:50
மும்பை : வங்கிகள் வழங்கும் முத்ரா திட்டத்தில், வாராக் கடன் அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கிறது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.கே.ஜெயின் கூறியுள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்ரல், 8ம் தேதி துவக்கி வைத்தார்.முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. ‘சிசு’ திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வாராக்கடன் அதிகரித்து வருகிறது.
இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எம்.கே.ஜெயின் மேலும் கூறியுள்ளதாவது: முத்ரா திட்டம், பல பயனாளிகளை, அவர்களின் வறுமையிலிருந்து விடுவிக்க உதவி செய்யும் திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்தில், வாராக் கடன் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. கடனை வழங்குவதற்கான மதிப்பீட்டு கட்டத்திலேயே, வாங்குபவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கடன்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|