துளி செய்தி துளி செய்தி ...  ஆல்டோ விற்பனை 38 லட்சத்தை தாண்டியது ஆல்டோ விற்பனை 38 லட்சத்தை தாண்டியது ...
முத்ரா கடன் குறித்து ரிசர்வ் வங்கி கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
06:50

மும்பை : வங்கிகள் வழங்கும் முத்ரா திட்டத்தில், வாராக் கடன் அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கிறது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.கே.ஜெயின் கூறியுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்ரல், 8ம் தேதி துவக்கி வைத்தார்.முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. ‘சிசு’ திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வாராக்கடன் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எம்.கே.ஜெயின் மேலும் கூறியுள்ளதாவது: முத்ரா திட்டம், பல பயனாளிகளை, அவர்களின் வறுமையிலிருந்து விடுவிக்க உதவி செய்யும் திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்தில், வாராக் கடன் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. கடனை வழங்குவதற்கான மதிப்பீட்டு கட்டத்திலேயே, வாங்குபவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கடன்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)