பதிவு செய்த நாள்
28 நவ2019
02:03
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
நிதி திரட்ட திட்டம்கடன் அட்டை வழங்குவதில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம். இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 8,000 கோடியிலிருந்து, 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், ‘சி.ஏ., ரோவர் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், மற்றும் எஸ்.பி.ஐ., வசம் இருக்கும், 13.05 கோடி பங்குகளையும் வெளியிட உள்ளது. 74 சதவீதம்சி.ஏ., ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நான்கு’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
ஐ., கார்ட்ஸ் நிறுவனம், செபியிடமிருந்து பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை பெற்று, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பங்குகளை வெளியிட்டால், இது தான் நடப்பு நிதியாண்டில் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தில், 74 சதவீத பங்குகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடமும்; மீதி, 26 சதவீத பங்குகள், கார்லைல் நிறுவனத்திடமும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|