‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...  ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2019
02:05

புதுடில்லி : அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடைபெறும், ‘இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி’யில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல், இது குறித்து மேலும் கூறியதாவது:நம் நாட்டில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கான திட்டத்தில் அரசு இறங்கி உள்ளது.இந்த முதலீடு, விமான நிலையங்கள், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் ஆகியவற்றில் தற்போது இருக்கும் உள்கட்டமைப்பின் தன்மையையும், தரத்தையும் மாற்றும் வகையில் பயன்படுத்தப்படும்.


இன்னும் சொல்வதென்றால், உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து துறைகளும், அதாவது, விமான போக்குவரத்து, கப்பல், சாலை போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய உந்துதலை காணப்போகின்றன.ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது சிறிய தொகை அல்ல.இந்திய ரயில்வே துறை, 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான திட்டத்தை தயாரித்து உள்ளது.


மேலும், 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது, ரயில்வேயில் இதற்கு முன் கேள்விப்பட்டிராத முதலீடாகும்.ஆனாலும், அரசால் இவ்வளவு பெரிய தொகையை, இதில் முதலீடு செய்ய முடியாது. எனவே, நாங்கள் தனியாரை துணைக்கு அழைக்க வேண்டியதிருக்கும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டுத் திட்டத்தின் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

அடுத்து, ஆர்.சி.இ.பி., எனும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேருவதில்லை என, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, மிகவும் தைரியமான முடிவாகும். இதன் மூலம், இந்திய நிறுவனங்களின் உரிமை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்தியா தன் சந்தையை உலகுக்குத் திறந்து வைக்கும் ஒரு சூழ்நிலை இப்போது இல்லை. அதேசமயம், உலகின் பிற சந்தைகளை நாம் அணுகுவதற்கு, நமக்கு சமமான அணுகல் மற்றும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.


இறக்குமதி வரி குறித்த தடைகள் நம் ஏற்றுமதியை தடுக்காத வகையில், பிற நாடுகளுடன் ஏற்றுமதியை தொடர வேண்டியதிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிரிசில் அறிக்கைமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், உள்கட்டமைப்பில் தனியார் முதலீடுகள் நிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


மேலும் உள்கட்டமைப்பு செலவினங்கள் 2008 – 2012 நிதியாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருந்தது, 2013- – 2017 வரையிலான ஆண்டுகளில், 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இல்லாவிட்டால், இன்னும் வீழ்ச்சியடையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)